இங்கிலாந்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் கிரிக்கெட் வீரர்களுக்கு வரவேற்பு

உலக கிண்ண போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி வீரர்களை இங்கிலாந்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்வு அண்மையில் உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இராஜதந்திர அதிகாரிகள் ,விளையாட்டு துறை சார்ந்தவர்கள் இங்கிலாந்தில் வாழும் இலங்கை மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகர தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் இலங்கை அணியின் தலைவர் உட்பட அதிகாரிகள் உரையாற்றினர். இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவுக்கு பொதுநலவாய செயலாளர் நாயகத்தால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sat, 05/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை