தாக்குதல் தொடரலாமென எச்சரிக்கை
இலங்கையிலுள்ள 10 இணையத்தளங்கள் மீது நேற்று அதிகாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் இணையத்தளம் மற்றும் குவைத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் உட்பட சில இணையத்தளங்கள் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர தயார்நிலை பிரிவு தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதல் காரணமாக நேற்று அதிகாலை முதல் இப் பத்து இணையத்தளங்களும் முடங்கியதுடன் சில மணித்தியாலங்கள் இவை செயலிழந்துள்ளன. என்றாலும் இலங்கை கணனி அவசர தயார்நிலை பிரிவின் பொறியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல சைபர் தாக்குதலுக்குள்ளான அனைத்து இணையத்தளங்களும் மீண்டும் வழமைக்குக் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சைபர் தாக்குதல் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இணையத்தளங்களை அவதானமாக இருக்குமாறு இலங்கை கணனி அவசர தயார்நிலை பிரிவு அறிவித்துள்ளது.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
from tkn