சஹ்ரானின் சகாக்கள் நால்வர் சென்னை பூந்தமல்லியில் கைது

இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை இளைஞர்கள் சென்னையில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் 21-ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு

இலங்கையை போன்று இந்தியாவிலும் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டி இருப்பதாக புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு கோவையில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர்கள் சிலரிடம் தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் குண்டு வைப்பதற்கு சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

இந்த எச்சரிக்கையையும் உளவுப்பிரிவு அதிகாரிகள் இலங்கையிடம் தெரிவித்திருந்தனர். அதன்பின்னர் தமிழகத்திலும் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இலங்கை குண்டு வெடிப்புக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பொலிஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிரதானமான மூளையாக செயல்பட்டு தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாத தலைவன் சஹ்ரான் ஹசீம் என்பவனின் உறவினர்கள், நண்பர்கள் யார் ? -யார் ?என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் விசாரணையை முடுக்கி விட்டனர்.

அப்போது பயங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்ய கடந்த 10 நாட்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.

கேரளா மாநிலம் பாலக்காட்டில் சஹ்ரான் ஹசீமின் நெருங்கிய ஆதரவாளரான ரியாஸ் என்பவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு பயங்கரவாதியான சஹ்ரான் ஹசீமின் பேச்சால் கவரப்பட்ட ரியாஸ் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையிலும் சஹ்ரான் ஹசீமின் ஆதரவாளர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சென்னை, மண்ணடியில் சந்தேகத்துக்கிடமாக ஒருவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையிலுள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையைச் சேர்ந்த சிலர் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ. படையினர் முகாமிட்டனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதனால் பொலிஸாரால் அங்கு தங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் யார் என்பது உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நிர்வாகிகளிடம் இரகசியமாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்தனர்.

இதன்பின்னர் அந்த வீட்டை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கு தங்கியிருந்த தாலுகா ரோசன் என்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது நண்பர்களான முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் மாலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் நள்ளிரவிலேயே 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களை இரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இவர்களில் தாலுகா ரோசன் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய நண்பர் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே இவர் சென்னைக்கு வந்தது தெரியவந்தது.

இலங்கையில் இருந்த போது சஹ்ரான் ஹசீமின் செயல்பாடுகளால் ரோசன் ஈர்க்கப்பட்டிருக்கலாமென்றும் சந்தேகிக்கப்படுகிறது.

தாலுகா ரோசன் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பூந்தமல்லி முகவரியில் போலியான சில அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் கடவுச்சீட்டு, விசா எதுவும் இருக்கவில்லை.

இதையடுத்து பொலிஸார் தாலுகா ரோசனை கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டிலிருந்து தப்பி வந்து அனுமதியின்றி தங்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இளைஞர் தாலுகா ரோசன் சென்னையில் தங்கியிருந்து இலங்கை குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டினாரா? குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தாலுகா ரோசன் பிடிபட்டதும் ‘கியூ’ பிரிவு பொலிஸாரும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதே நேரத்தில் முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன.

இதனைத் தொடர்ந்து இருவரையும் முறைப்படி அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப இலங்கை தூதரக அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை சென்றதும் அந்நாட்டு பொலிஸார் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இலங்கையை சேர்ந்த வேறு யாரும் தங்கியிருக்கிறார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

வரப்பட்டுள்ளது.

Thu, 05/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை