புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று (05) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு, முஸ்லிம் சமய விவகாரத் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன நிருவாகிகள், மேமன் சங்க நிருவாகிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர்.
நாட்டின் எந்தப் பாகத்திலாவது இன்று மாலை ரமழான் தலைப்பிறை தென்பட்டால் அதனை போதிய ஆதாரங்களுடன் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறியத்தருமாறு கேட்கப்படுகின்றனர்.
தொலைபேசி இலக்கங்கள்: 0112432110, 0112451245, 0714817380.
Sun, 05/05/2019 - 14:02
from tkn