மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை சீனா நோக்கி புறப்பட்டார்.
சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறும் ஆசிய நாகரிமடைதல் தொடர்பான (Conference on Dialogue of Asian Civilizations) மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு அவர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (13) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து UL 302 எனும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் ஊடாக சீனா நோக்கி பயணமானார்.
இப்பயணத்தில் ஜனாதிபதியுடன், 27 பேர் கொண்ட குழுவொன்று கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mon, 05/13/2019 - 09:47
from tkn