பங்களாதேஷில், அதிபரின் உத்தரவின் பேரில் பாடசாலை மாணவி ஒருவர் தீயிட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 16 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இரண்டு பேர், கொல்லப்பட்ட மாணவியின் வகுப்பைச் சேர்ந்த பெண்களாவர். நுஸ்ரத் ஜஹான் ரபி எனும் அந்த 19 வயது மாணவி கடந்த மார்ச் மாதம் தனது தலைமையாசிரியர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு தருவதாகப் புகார் கொடுத்திருந்தார்.
புகாரைத் திரும்பப் பெறுமாறு நுஸ்ரத்தை ஒரு கும்பல் மிரட்டியது, ஆனால் அவர் மறுத்ததால் தீயிட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்தச் சம்பவத்தைக் கண்டித்து பங்களாதேஷின் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
Thu, 05/30/2019 - 06:00
from tkn