சஹ்ரானின் சகோதரன் ரிழ்வானின் வீட்டிலிருந்து தற்கொலை அங்கி உட்பட பொருட்கள் மீட்பு

மாமனார் மாமி கைது

சாய்ந்தமருது தற்கொலை குண்டு வெடிப்பில் பலியான சஹ்ரானின் சகோதரர் ரிழ்வானின் காத்தான்குடி வீட்டிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் 4 கையடக்க தொலைபேசிகள், இரண்டு ஏ.ரி.எம்.வங்கி அட்டைகள், வங்கி புத்தகம், கொல்லப்பட்ட ரிழ்வான் தம்பதிகளின் குழந்தைகளின் 4 புகைப்படங்கள், ரிழ்வானின் தேசிய அடயாள அட்டை உட்பட பல பொருட்களை நேற்று மாலை விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவத்தார். வீட்டிலிருந்த ரிழ்வானின் மாமா மற்றும் மாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சாய்ந்தமருதில் இடம்பெற்ற சம்பவத்தில் ரிழ்வானும் அவரது மனைவியும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு குறூப் நிருபர்

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை