நெய்மருக்கு மூன்று போட்டிகளில் தடை

பிரான்ஸ் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியை அரங்கில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நெய்மர், ரசிகரின் முகத்தில் குத்து விட்டதால் மூன்று போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன்–ரென்னெஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2–2 என சமநிலையில் முடிந்ததால் ‘பெனால்டி’ சூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரென்னெஸ் அணி வெற்றி பெற்றது.

காயத்தால் தற்போது வெளியில் இருக்கும் பி.எஸ்.ஜி அணியின் முன்னணி வீரரான நெய்மர், அரங்கில் இருந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். தனது அணி தோல்வியடைந்த விரக்தியில் இருந்த நெய்மரை, ரென்னெஸ் ரசிகர் ஒருவர் படம் பிடித்ததாக தெரிகிறது.

இதனால் கோபம் அடைந்த நெய்மர், அந்த ரசிகரின் முகத்தில் குத்து விட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி, நெய்மருக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை