உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்

உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா (2019 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண) போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றது. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-,தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர் ஒருநாள்உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது.

இதுவரை நடைபெற்று முடிந்த 11 உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸி. அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்றது. 1975, 1979- மேற்கிந்திய தீவுகள், 1983 -இந்தியா, 1987-அஸ்திரேலியா, 1992- பாகிஸ்தான், 1996- இலங்கை, 1999- அஸ்திரேலியா, 2003- அஸ்திரேலியா, 2007-அஸ்திரேலியா, 2011-இந்தியா, 2015- அஸ்திரேலியா என பட்டம் வென்றுள்ளன.

கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்து இது வரை ஒருமுறை கூட உலக கிண்ணத்தை வெல்லவில்லை.

அதே போல் வலுவான அணிகளான நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்டவை முதன் முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளன.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை ஏற்கெனவே 4 முறை நடத்தியுள்ள இங்கிலாந்து தற்போது 2019-இல் 5-ஆவது முறையாக நடத்துகிறது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மொத்தம் 11 மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன.

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை