வெள்ளை மாளிகை முன் தீக்குளிப்புச் சம்பவம்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பாக திடீரென ஒருவர் தம் மீது பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மாதங்களுக்குள் அவ்வாறு நடந்திருப்பது இது இரண்டாவது முறையாகும்.

உடலில் பரவிய தீ அணைக்கப்படுவதற்கு முன் தீக்குளித்த மனிதர் தத்தளித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. என்ன காரணத்துக்காக அந்த மனிதர் தீக்குளித்தார் என்பது பற்றித் தெரியவில்லை.

தீக்குளித்த மனிதர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடைய உயிருக்கு ஆபத்து இல்லை என்று அமெரிக்க உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த நபர் பெரிய தீக்காயங்கள் ஏற்படாத அளவிற்கு பாதுகாப்பு கவசம் ஒன்றினை அணிந்திருந்தார். ஆனால் அதனையும் மீறி அவரது உடலில் 85 வீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மாற்றுத்திறனாளி ஒருவர் வெள்ளை மாளிகை முன்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவத்தையடுத்து நிகழ்ந்த இச்சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

Fri, 05/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை