சுற்றுலா வீசாவில் வந்து நகைக் கடையொன்றில் வேலை செய்து வந்த இந்திய பிரஜைகள் இருவரை, யாழ்ப்பாணத்தில் இன்று (17) காலை விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர்.
சுற்றுலா வீசாவில் வருகை தந்துள்ள இவர்கள்,போதிய ஆவணங்களை சமர்ப்பிக்காத பட்சத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இவர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம், விசேட அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.
(சுமித்தி தங்கராசா -யாழ்ப்பாணம் குறூப் நிருபர்)
Fri, 05/17/2019 - 14:30
from tkn