அமெரிக்க பாடசாலையில் சூடு: மாணவர் ஒருவர் பலி

அமெரிக்காவில் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

டென்வர் பகுதியில் உள்ள தனியார் பாடசாலைக்குள் புகுந்த 2 பேர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 18 வயது மாணவர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் உட்பட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட இருவரை பொலிசார் கைது செய்தனர்.

சம்பவ இடத்திலிருந்து கைத்துப்பாக்கி ஒன்றை மீட்டதாகக் கூறிய பொலிஸார், கைதான ஆடவரும், இளைஞரும், இதுவரை அமுலாக்க அதிகாரிகளின் கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெறாதோர் என்று குறிப்பிட்டனர்.

டென்வருக்கு அருகே அமைந்திருக்கும் அந்தப் பாடசாலையில், பாலர்கல்வி முதல் உயர்நிலை வரையிலான மாணவர்கள் பயில்கின்றனர்.

2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற 115 ஆவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது உள்ளது.

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை