இந்து கால்நடை மருத்துவர் மீது தெய்வ நிந்தனைக் குற்றச்சாட்ட

பாகிஸ்தானில் கலவரம் ு

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத வாசகங்கள் உள்ள காகிதத்தில் சுற்றி மருந்துகளை விற்றார் என்பதே அந்த மருத்துவர் மீதான குற்றச்சாட்டாகும்.

தென் கிழக்கு பகுதியின் சிந்து மாகாணத்தில் உள்ள மிர்பூர் காஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் கலவரம் வெடித்தது. இந்துகளின் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. கால்நடை மருத்துவர் இது தவறுதலாக நடந்த விடயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய கல்வி பாடசாலையின் பாடநூலிலிருந்து கிழிக்கப்பட்ட காகிதங்கள் அவை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

பாகிஸ்தான் தெய்வ நிந்தனை சட்டம் இஸ்லாமிய மதத்தை பழிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குகிறது. இந்தச் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக தவறுதலாக பயன்படுத்தப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நோயுற்ற கால்நடைக்காக மருந்து வாங்க வந்த ஒருவருக்கு மருந்துகளை ஒரு காகிதத்தில் சுற்றி அந்த மருத்துவர் கொடுத்தள்ளார். மருந்துகளை வாங்கியவர் அந்த காகிதத்தில் இஸ்லாமிய மதம் தொடர்பான எழுத்துகள் இருப்பதை பார்த்துள்ளார். இதனை உள்ளுர் அதிகாரியிடம் தெரிவித்ததை அடுத்து அந்த அதிகாரி உடனே பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவரின் மருத்துவமனை, மருந்தகம் மற்றும் இரண்டு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாக உள்ளுர் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் தெய்வ நிந்தனை செய்த வழக்கொன்றில் கிறிஸ்தவ பெண்ணான ஆசியா பீபியை விடுதலை செய்து பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை