சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

எதிர்வரும் 8ஆம் திகதி திறக்கப்படவிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகமானது, மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டுள்ளதாக, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வீ.டி. கித்சிறி அறிவித்துள்ளார். 

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது அப்பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார். 

சப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், அவர் கூறினார்.

Sat, 05/04/2019 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை