யாழ். காங்கேசந்துறையிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த உத்தரதேவி ரயிலுடன், மினி வேன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில், குறித்த வேனின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். எழுதுமட்டுவாழ் பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற விபத்தில் குறித்த மினி வேன் முற்றாக சேதமடைந்துள்ளது.
எழுதுமட்டுவாழ் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை குறித்த மினி வேன் கடக்க முற்பட்டபோதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
(மயூரப்பிரியன் -யாழ்.விசேட நிருபர்)
Sat, 05/11/2019 - 10:04
from tkn