உமையாள்புரத்தில் யாழ்தேவி – உழவு இயந்திரம் மோதி விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவி கடுகதி ரயிலும், உழவு இயந்திரமும்; மோதி விபத்திற்குள்ளானது.

உமையாள்புரம் பகுதியில் இன்று (04) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளது. எனினும், உழவு இயந்திரத்தின்  சாரதி எவ்வித காயமுமின்றி தப்பியுள்ளார்

அறிவியல் நகர் பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் கழிவுகளை அகற்றிவிட்டு,  திரும்பிக்கொண்டிருந்தபோதே, உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானது.

இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sat, 05/04/2019 - 12:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை