சப்ரகமுவ பல்கலை 8இல் ஆரம்பம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வீ.டி. கித்சிறி தெரிவித்தார்.

பல்கலைக்கழக விடுதிகளில் தங்கும் மாணவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி விடுதிகளுக்கு வருகை தர வேண்டும் என்பதோடு, மாணவர்கள் தங்களது அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையில்,  மாணவர் அறிக்கை புத்தகம் மற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளுடன் சமூகமளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.  

Fri, 05/03/2019 - 10:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை