யாழிலிருந்து 750 கி.மீ. தூரத்தில் போனி சூறாவளி மையம்

மேற்கு - மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்காக விருத்தியடைந்த போனி (Fani)  சூறாவளி,  நேற்று (01) முற்பகல் 11.30 மணிக்கு வட அகலாங்கு15.2N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.1E  இற்கும் அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக ஏறத்தாழ 750 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது வடக்கு- வடகிழக்கு திசையில் இலங்கையை விட்டு விலகி இந்தியாவின் ஒடிஷா கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் மேக மூட்டமான வானமும்,   பலத்த காற்றுடன் கூடிய காலநிலையும், மழையுடனான வானிலையும் தொடர்ந்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாடு, வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இப்பகுதிகளின் சில இடங்களில் 100மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும்  எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பகுதிகளின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

எனவே, பொதுமக்களும் கடலில் பயணிப்போரும்  மீனவ சமூகத்தினரும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Thu, 05/02/2019 - 09:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை