தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டு சிறை

அவுஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸ் ஹெப்பெர்ன் என்ற கிரிக்கெட் வீரர், வொர்செஸ்டர்ஷைர் கழக கிரிக்கெட் கழக சார்பில் விளையாடி வருகிறார். இவர் ஒரு சகல துறை வீரர்.

2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பார்ட்டிக்கு சென்ற அலெக்ஸ் நன்றாக குடித்தார். அதன்பின், சக வீரரின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கற்பழித்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு இங்கிலாந்தின் வொர்செஸ்டர்ஷைர் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் அலெக்சின் குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து, ஏப்ரல் 30-ம் திகதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹெப்பெர்னுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

Thu, 05/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை