அமித் வீரசிங்கவுக்கு ஜுன் 4 வரை விளக்கமறியல்

மஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்கவுக்கு எதிர்வரும் ஜுன் 4 ஆம் திகதி வரைவிளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

இன்று (29) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபோதே, அவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அண்மையில்  தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கலக சம்பவங்கள் தொடர்பாக மஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க,  கடந்த 14ஆம் திகதி  கைதுசெய்யப்பட்டு நேற்று வரை அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது.

கலக சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினராலேயே அவர்  கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Wed, 05/29/2019 - 13:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை