பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதுசெய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் வென் ரோயனை விடுவிக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.
சந்தேக நபரை இன்று (09) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, 4,000 ரூபா அபாரதம் விதித்து நடிகர் ரயன் வென் ரோயனை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
நடிகர் ரயன் வென் ரோயன் உள்ளிட்ட 5 பேர் துபாயிலிருந்து, இலங்கைக்கு கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ரயன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, நடிகர் ரயன் வென் ரோயன் தவிர்ந்த, ஏனைய நால்வரும் விசாரணையை அடுத்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி ரயனின் காரிலிருந்து 5.75 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.
from tkn