நாடு முழுவதிலும் இன்று (14) இரவு 9.00 மணி முதல் நாளை (15) அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்தில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று (14) மாலை 4.00 மணிக்கு நீக்கப்பட்டதோடு, மாலை 6.00 மணி தொடக்கம் நாளை காலை 6.00 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
அதே போன்று கம்பஹா பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 7.00 மணி தொடக்கம் நாளை காலை 6.00 மணி வரை பிரடகனப்படுத்தப்பட்டுள்ளது.
(ஸாதிக் ஷிஹான்)
Tue, 05/14/2019 - 18:51
from tkn