மஸ்கெலியாவில் குளவி கொட்டியதில் 3 சிறுவர்கள் பாதிப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரஸ்பி தோட்ட குமரிப் பிரிவில் 3சிறுவர்கள் குளவிக் கொட்டுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி லியத்தப்பிட்டிய தெரிவித்தார்.

இன்று (04) காலை விறகு எடுப்பதற்காகச் சென்றபோதே, இச்சிறுவர்கள் குளவிக் கொட்டுக்கு உள்ளானார்கள்.

கற்பாறைக்கு அடியிலிருந்த குளவிக் கூட்டிலிருந்த குளவிகள் கலைந்து வந்து தங்களைக் கொட்டியதாக, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்தனர்.

16வயதுடைய இரு சிறுவர்களும் 11வயதுடைய ஒரு சிறுவனுமே குளவிக் கொட்டுக்கு உள்ளானார்கள். 

(செ.தி.பெருமாள் -மஸ்கெலியா தினகரன் விசேட  நிருபர்)

Sat, 05/04/2019 - 13:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை