புல்மோட்டையில் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு இஞ்சின்களுக்கு இனந்தெரியாதோரினால் இன்று (25) முற்பகல் தீ வைக்கப்பட்டுள்ளது.
புல்மோட்டை, ஜின்னாபுரக் கடற்கரையோரத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த 3 படகுகள் மற்றும் 40 குதிரைவலுக் கொண்ட 2 இன்ஜின்களுக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மீனவர்களின் படகுகளே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் -அப்துல் சலாம் யாசீம்)
Sat, 05/25/2019 - 13:28
from tkn