மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள ரணசிங்க பிரேமதாசவின் திருவுருவச் சிலையின் முன்பாக இன்று (01) முற்பகல் நடைபெற்றது.
இதன்போது, மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் முதற்பெண் ஹேமா பிரேமதாச மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதற்பெண் ஹேமா பிரேமதாச உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Thu, 05/02/2019 - 13:59
from tkn