பிரேமதாசவின் 26வது சிரார்த்த தினம் இன்று

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 26வது சிரார்த்த தினம் இன்றாகும். புதுக்கடையில் உள்ள அன்னாரின் சிலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 6.30 மணிக்கு அஞ்சலி செலுத்துவார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்

சபாநாயகர் கரு ஜயசூரியவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வோர் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிடங்கள் மௌனஞ்சலி செலுத்துவர்.

அத்துடன் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கும் அந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்படும். கொழும்பு மேயர் ரோசி சேனநாயக்க, முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் சிலைக்கு மாலை அணிவிப்பார்.

பாதுகாப்புப் படையினர் மரியாதை செலுத்துவர். முன்னாள் முதற்பெண் ஹேமா பிரேமதாச, அமைச்சர் சஜித் பிரேமதாச, துலாஞ்சலி பிரேமதாச மற்றும் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர்.

 

Wed, 05/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை