யாழ். பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் 22 இல் ஆரம்பம்

மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களுக்கான கல்வி நடவடிக்கைகள்  22இல் ஆரம்பம்

விடுதி மாணவர்களை 21இல்  வருமாறும் அழைப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் அறிவித்துள்ளார்.

கலைப்பீடம் -(இராமநாதன் நுண்கலைப்பீடம் உட்பட), விஞ்ஞானபீடம், முகாமைத்துவ மற்றும் வணிகபீடம், விவசாயபீடம், பொறியியல்பீடம், தொழில்நுட்பவியல்பீடம், ஆகியற்றுக்கும் சித்த மருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.

இதேவேளை, விடுதிகளில் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கைகளை தொடரும்  மாணவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுதிகளுக்கு திரும்ப வேண்டும்.

அத்தோடு, விடுதிகளின் உள்ளேயும், பல்கலைக்கழகத்தின் சகல பகுதிகளிலும் மாணவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம் ஒன்றினை எடுத்துவர வேண்டும் எனவும், அவர் தெரிவித்தார்.

(கோப்பாய் நிருபர் -செல்வகுமார், நிதர்சன் விநோத்)

Sat, 05/18/2019 - 10:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை