அண்மையில் மினுவாங்கொடையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 15 பேர் இன்று (29) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 15 பேரும் மினுவாங்கொடை நீதவான் கேசர சமரதிவாகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த 15 பேரும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயினும், குறித்த சந்தேக நபர்கள் மீது தண்டனைச் சட்ட கோவையின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேலும் 4 சந்தேக நபர்களும் இந்த சம்பவத்துடன் தொடர்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Wed, 05/29/2019 - 12:29
from tkn