மினுவாங்கொடை வன்முறை; கைதான 15 பேருக்கு பிணை

அண்மையில் மினுவாங்கொடையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 15 பேர் இன்று (29) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 15 பேரும் மினுவாங்கொடை நீதவான் கேசர சமரதிவாகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த 15 பேரும் தலா 2  இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயினும், குறித்த சந்தேக நபர்கள் மீது தண்டனைச் சட்ட கோவையின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேலும் 4 சந்தேக நபர்களும் இந்த சம்பவத்துடன் தொடர்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

Wed, 05/29/2019 - 12:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை