களுத்துறையில் நாளை 12 ½ மணி நேர நீர் வெட்டு

நாளைய தினம் காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.30 வரையான 12 ½ மணித்தியாலங்களுக்கு களுத்துறை பிரதேசத்தில் நீர் விநியோகம் தடைப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர்விநியோகம் தடைப்படுமென,தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி மக்கொன, பேருவளை, அளுத்கம, தர்கா நகர், பெந்தோட்டை, வாதுவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை- வடக்கு மற்றும் களுத்துறை- தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலமினாவத்த மற்றும் பொம்புவல ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு இடம்பெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 05/07/2019 - 13:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை