அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஏமாற்றம் காரணமாக கடல் கடந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களிடையே தற்கொலை முயற்சி அதிகரித்துள்ளது.
புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வருபவர்கள் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் நாவுரு மற்றும் மனுஸ் தீவு, பப்புவா நியுகினியில் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் ஏற்படும் ஆட்சி மாற்றம் ஒன்று தமக்கு சாதகமாக அமையும் என்று புகலிடக் கோரிக்கையாளர்கள் நம்பி இருந்தனர். எனினும் அகதிகள் விடயத்தில் கடும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அரசு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
“மனுஸின் நிலை கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இன்றும் கூட இருவர் தற்கொலைக்கு முயற்சித்தனர்” என்று அங்குள்ள ஈரான் குர்திஷ் அகதி ஒருவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு அகதியான அப்துல் அஸிஸ் எழுதி இருப்பதாவது, “மனுஸ், நாவுரு அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக (அரசு) ஏதாவது செய்யும்படி நாம் அழைக்கிறோம்” என்றார்.
அவுஸ்திரேலிய தேர்தலுக்கு பின்னர் இதுவரை புகலிடக் கோரிக்கையாளர்களிடையே 10 தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளன.
from tkn