வவுனியாவில் மினி சூறாவளி; இருவர் காயம்; 06 வீடுகள் சேதம்

வவுனியா, ஓமந்தை பகுதியில் வீசிய மினி சூறாவளியால் இருவர் காயமடைந்துள்ளதுடன் 06 வீடுகளும் ஆலயமும் சேதமடைந்துள்ளன.

நேற்று முன்தினம் மாலை ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராமத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது திடீரென வீசிய மினி சூறாவளியுடன் கூடிய மழையினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பயன்தரு மரங்களான தென்னை, வாழை மற்றும் பல மரங்கள் சரிந்து வீழ்ந்தன.

இதனால் 06 வீடுகளின் கூரைகளும், ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலயத்தின் கூரையும் தூக்கி வீசப்பட்டதுடன், கூரைக்கு பயன்படுத்தப்பட்ட வெட்டு மரங்களும் முறிந்து வீழ்ந்தன. வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டினுள் இருந்த பொருட்கள் மழையில் நனைந்தன.

அத்துடன் ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் வீட்டின் கூரை பகுதி வீழ்ந்தமையால் இருவர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்ட வீடுகளை மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் பார்வையிட்டதுடன் அம் மக்களுக்கான உடனடித் தேவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

வவுனியா விசேட நிருபர்

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை