தென்கிழக்கு ஆபிரிக்காவில் வாந்திபேதியால் பலர் பாதிப்பு

இடாய் புயல் பாதிப்புக்குள்ளான மொசாம்பிக், மாலாவி, சிம்பாப்வே நாடுகளில் வாந்திபேதி நோயால் சுமார் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 14ஆம் திகதி, இடாய் புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி இந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 பேர் பலியாகினர்.

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக முகாம்களில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், வாந்திபேதி உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் வாந்திபேதி நோய்க்கு 3 பேர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 1700 பேர் பாதிப்பிக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவசர நடவடிக்கையாக சுகாதாரத்துறை அதிகாரிகள் 6 நாட்களுக்கு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை