மாத்தறை பெலியத்தை ரயில் வௌ்ளோட்டம்

மாத்தறை – கதிர்காமம் பாரிய புதிய ரயில் பாதை நிர்மாணிப்புத் திட்டத்தின் கீழ் முதல்கட்ட ரயில் பாதை நிர்மாணம் நிறைவடைந்த நிலையில், நேற்றைய தினம் மாத்தறையிலிருந்து பெலியத்தைக்கு வெள்ளோட்ட ரயில் பயணம் ஆரம்பமாகியது.

நேற்றுக் காலை 10 மணிக்கு பெலியத்தை ரயில் நிலையத்திலிருந்து போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவால் மேற்படி ரயில் பாதை திறந்து வைக்கப்பட்டு வெள்ளோட்ட ரயில் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனைக் கண்டு களிப்பதற்காகப் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பெருமளவு மக்கள் பெலியத்தை ரயில் நிலையத்தில் திரண்டிருந்தனர்.

பெலியத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ரயில் நிலையத்தை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நாடாவை வெட்டி உத்தியோகபூர்வாகத் திறந்து வைத்தார். போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான மகிந்த அமரவீர, திலிப் வெதஆரச்சி மற்றும் தென் மாகாண ஆளுநர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் மேற்படி நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். (ஸ)

 

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை