நாடளாவிய ரீதியில் அனைத்து வீடுகளும் சோதனை செய்யப்படும்

RSM
நாடளாவிய ரீதியில் அனைத்து வீடுகளும் சோதனை செய்யப்படும்-President Meets Media Institution Heads-Terrorist Attack
  • பிரதமருக்கும் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்படவில்லை
  • சிறிய பிரிவினராலேயே பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
  • அனைத்து முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம்
  • நாடளாவிய ரீதியில் அனைத்து வீடுகளும் சோதனை
  • சில ஊடகங்கள் தேவையற்ற செய்திகள் “பிரேக்கிங் நியுஸ்”

"அரச புலனாய்வு பணிப்பாளருக்கு இந்த தாக்குதல் சம்பவம் பற்றி முதலில் முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. வெளிநாடு ஒன்றினால் புலனாய்வு பணிப்பாளருக்கு வழங்கப்பட்ட கடிதம் நீண்டதொரு கடிதமாகும். அதை நீங்களும் பார்த்திருக்கக்கூடும். அந்த கடிதத்தில் இவ்வாறானதொரு தாக்குதல் விரைவில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தாக்குதல்கள் நடத்தப்படும். எனினும் அதேபோன்று முக்கியமாக மக்கள் ஒன்றுசேரும் இடங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து கடிதத்தில் உள்ள விடயம் தாக்குதல் இடம்பெறும் விதம், குண்டுவெடிப்புகள், ஸ்னைப்பர் தாக்குதல்கள், வேறு வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்று 5 அல்லது 6 விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அத்தோடு அத்தாக்குதலுடன் தொடர்புபடுகின்றவர்களின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த விடயங்கள் எமது வெளிநாட்டு நட்பு புலனாய்வு துறையினால் எமது புலனாய்வு துறை பணிப்பாளருக்கு ஏப்ரல் 04ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை இந்த கடிதம் அங்குமிங்கும் சென்றுள்ளது. புலனாய்வு துறை பணிப்பாளர் தனது பணியை செய்திருக்கின்றார். பாதுகாப்பு செயலாளருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் இதனை பெரிதாக கொள்ளாது, இதன் பாரதூரத்தை கருத்திற்கொள்ளாது தேசிய பாதுகாப்பு பிரதானிக்கு இந்த கடிதத்தில் குறிப்பொன்றை எழுதி அனுப்பியுள்ளார். அந்த தேசிய பாதுகாப்பு பிரதானி அந்த கடிதத்தை அவரது கடமை நிமித்தம் சாதாரண முறையிலேயே அனுப்பி இருக்கிறார். அவர் அந்த கடிதத்தை பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பியிருக்கிறார். பொலிஸ்மா அதிபரின் கைக்கும் பாதுகாப்பு செயலாளரின் கைக்கும் சென்ற அதுவே ஊடக நண்பர்களுக்கு கிடைத்த முழுமையான விபரங்கள் அடங்கிய கடிதமாகும். அதுவே இவ்வாறு குறிப்புகளுடன் சென்றிருக்கிறது. அதன் பின்னர் பொலிஸ்மா அதிபர் அதில் குறிப்பொன்றை எழுதி இன்னும் 05 பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு அனுப்பியிருக்கின்றார். அந்த பிரதி பொலிஸ்மா அதிபர்களில் ஒருவர் பிரதி பொலிஸ்மா அதிபரான பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தசநாயக்கவாகும். அவர் பிரபுக்கள் பாதுகாப்புகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு இந்த கடிதத்தின் விபரங்களை அனுப்பி இப்படியான தாக்குதல் ஒன்று இடம்பெறவிருப்பதால் பிரபுக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆயினும் பாதுகாப்பு செயலாளர் அல்லது பொலிஸ்மா அதிபர் அல்லது கடிதத்தை அனுப்பி வைத்த 5 பிரதி பொலிஸ்மா அதிபர்களில் 4 பேரும் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வில்லை. இந்த வகையில் ஏப்ரல் 04ஆம் திகதி முதல் ஏப்ரல் 12ஆம் திகதி வரை ஒருவர் மாறி ஒருவருக்கு இக்கடிதம் கைமாறியுள்ளது. நான் வெளிநாடு சென்றதாகவும் எவருக்கும் நாட்டின் பாதுகாப்பை பொறுப்பளிக்கவில்லை என்றும் என்மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் வெளிநாடு செல்கின்றபோது பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளிநாடு செல்லும்போதும் பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்கவில்லை. பதில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை 2007 - 2010 காலப் பகுதியில் யுத்தம் கடுமையாக இருந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ 5 சந்தர்ப்பங்களில் என்னிடம் பொறுப்பளித்திருக்கிறார். ஆனால் 2010க்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவும் எவருக்கும் பதில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கவில்லை.

எனவே இந்த கடிதம் ஏப்ரல் 04ஆம் திகதி இலங்கையில் முக்கியஸ்தர்களிடம் கிடைக்கப்பெற்று ஏப்ரல் 12ஆம் திகதி வரை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு மத்தியில் பரிமாற்றப்பட்டிருக்கிறது. நான் ஏப்ரல் 16ஆம் திகதி வெளிநாடு சென்றேன். அதாவது அந்த கடிதம் கிடைக்கப்பெற்று 12 நாட்களின் பின்னரே நான் வெளிநாடு சென்றிருக்கின்றேன். அதுவரையில் அந்த கடிதம் கிடைக்கப்பெற்றது பற்றி பாதுகாப்பு செயலாளரோ பொலிஸ்மா அதிபரோ எனக்கு அறிவிக்கவில்லை. இந்த கடிதத்தை என்னிடம் காட்டவும் இல்லை. இது நான் தப்பித்துக்கொள்வதற்காக கூறுகின்ற விடயங்கள் அல்ல. என்றாலும் உண்மையான நிலைமை பற்றியே இங்கு குறிப்பிடுகின்றேன். 16ஆம் திகதி நான் இந்தியாவுக்கு யாத்திரை பயணம் ஒன்றை மேற்கொண்டேன். 3 நாட்கள் இந்தியாவில் இருந்தேன். இந்தியாவில் இருந்து இங்கு வருவதற்கு ஒரு மணித்தியாலமே தேவைப்படும். ஆயினும் அப்போது நாட்டில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆகையால் நான் ஓய்வுக்காகவே சிங்கப்பூருக்கு சென்றேன். அங்கு நான் 3 நாட்கள் தங்கியிருந்தேன். 21ஆம் திகதி மாலையிலேயே நான் இலங்கை வர இருந்தேன். 21ஆம் திகதி காலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் சிங்கப்பூரிலுள்ள எனது நண்பர் ஒருவர் அவரது கைத்தொலைபேசியில் இதோ ஜனாதிபதி அவர்களே, சமூக ஊடகங்களில் இப்படியொரு கடிதம் சுற்றிக்கொண்டிருக்கிறது என என்னிடம் காட்டினார். அது பிரதி பொலிஸ்மா அதிபர் தசநாயக்க பிரபுக்கள் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இத்தகைய சம்பவமொன்று இடம்பெறக்கூடும். ஆகையால் அவர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறி அனுப்பிய கடிதமாகும். நான் தசநாயக்கவின் அந்த கடிதத்தை சிங்கப்பூரில் உள்ள சமூக ஊடகத்திலேயே பார்த்தேன். அந்த கடிதம் பொலிஸ்மா அதிபரின் பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சென்றிருக்கின்றது. அவர் தான் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளர். பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைகளை, ஆவணங்களை அனுப்புகின்றவர். அதாவது பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபர்தான் இந்த கடிதத்தை தசநாயக்கவுக்கும் ஏனைய பொலிஸ்மா அதிபர்களுக்கும் அனுப்பியிருக்கிறார். பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபர் பிரபுக்கள் பாதுகாப்பு பற்றி தசநாயக்கவிடம் தெரிவித்திருக்கிறார்.  என்றாலும், தசாநாயக்க என்பவர் ஜனாதிபதியினதோ பிரதமரினதோ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரி அல்ல, ஆயினும் அந்த பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபர் தனது அந்த கடிதத்தை ஏனையவர்களுக்கு அனுப்பியதை போன்று ஜனாதிபதியினதும் பிரதமரினதும் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் அனுப்பியிருக்க வேண்டும். என்றாலும் இந்த இருவரில் ஒருவருக்கேனும் அந்த கடிதம் அனுப்பப்படவில்லை. பிரதமருக்கு அறிவிக்கப்படவும் இல்லை. அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவும் இல்லை. இதனாலேயே எமக்கு தெரியாது என அண்மையில் கூறப்பட்டது."

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிய உரை

  • ISIS பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கான பலம் இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் உள்ளதென ஜனாதிபதி தெரிவிப்பு……
  • சர்வதேச பயங்கரவாதத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்….
  • அமைதியான சூழலொன்றை ஏற்படுத்தும் பொறுப்புடன் ஊடகங்களை கையாளுமாறு ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள்…

நாடளாவிய ரீதியில் அனைத்து வீடுகளும் சோதனை செய்யப்படும்-President Meets Media Institution Heads-Terrorist Attack

நாடு முழுவதும் பாரியளவிலான தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அடையாளம் தெரியாத நபர்களை கண்டுபிடிக்கும் வகையில் நாட்டிலுள்ள ஒவ்வொரு வீடுகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டு, அதிலுள்ள நிரந்தர வதிவாளர்களின் பெயர்களை பட்டியலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எல்.ரி.ரி. தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை போன்ற செயற்பாடே இதுவாகும் என சுட்டிக்காட்டிய அவர், சந்தேகநபர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இன்று (26) முற்பகல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் அனைத்து வீடுகளும் சோதனை செய்யப்படும்-President Meets Media Institution Heads-Terrorist Attack

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் செயற்பாடுகளின் மூலம் உலகில் ஏற்பட்டிருக்கின்ற அனேக சம்பவங்களைப்போன்றே எமது நாட்டிலும் ஏற்பட்டிருக்கும் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பற்றி நான் இங்கு உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாம் 30 வருடங்களாக மிகவும் தீவிரமான பயங்கரவாத இயக்கத்துடன் போராடி அதில் வெற்றிபெற்ற நாட்டினராவோம். அந்த 30 வருட காலப்பகுதியில் சில சந்தர்ப்பங்களில் எமக்கு வெற்றிகள் கிடைத்த அதேவேளை சில சந்தர்ப்பங்களில் தோல்விகளுக்கும் முகங்கொடுக்க நேர்ந்தது.

ஒரு இலட்சம் இந்திய படையினர் இலங்கைக்கு வருகை தந்தும் எல்ரீரீஈ. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியாமல் திரும்பிச் சென்றனர் என்பதே வரலாறு. கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் பற்றி எமது நாட்டின் அரசியல் துறையில் குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் நாட்டில் முதன்முறையாக இவ்வாறானதொரு குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக சுட்டிக்காட்ட முனைகின்றார்கள். இதற்கு முன்னர் பதவியில் இருந்த அனைத்து ஜனாதிபதிகளினதும் ஆட்சிக்காலப் பகுதியில் குண்டுகள் வெடித்துள்ளன. இதுதான் உண்மையான நிலைமை. ஜே.ஆர்.ஜயவர்தன முதல் மஹிந்த ராஜபக்ஷ காலப் பகுதி வரை குண்டு வெடிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களின்போது சிங்கள மக்கள் எல்ரீரீஈ. இயக்கம் 1980களில் ஆரம்பமானபோது அனைத்து தமிழ் மக்களையும் பயங்கரவாதிகளாகவே பார்க்கத் தொடங்கினர். ஆயினும் பிற்காலத்தில் யுத்தம் தொடர்ந்தபோது எல்ரீரீஈ. இயக்கம் என்பது என்ன என்பதைப் பற்றி தெளிவாக தெரியவந்தபோது சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களைப் பற்றிய தமது பார்வையை மாற்றிக்கொண்டனர்.

சிறிய ஒரு பிரிவினரே இத்தகைய பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். ஆகையால் இன்றைய தினத்திலும் குறிப்பாக நான் இந்த நாட்டு மக்களிடம் அனைத்து முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். நான் நேற்று காலை சர்வ கட்சி மாநாட்டை நடத்தியதோடு, நேற்று மாலை சர்வ மத கூட்டத்தினை நடத்தினேன். அந்த சர்வ மத கூட்டத்தின்போது இளம் முஸ்லிம் மதகுரு ஒருவர் தேம்பித் தேம்பி அழுத்தார். அவரது அழுகையை எமக்கு நிறுத்த முடியாது போய்விட்டது. “எனது பிள்ளை சிங்கள பாடசாலைக்கு செல்கிறது. நாம் காலியில் வசிக்கின்றோம். இந்த சம்பவம் உருவாகியிருக்கும் நிலைமையின் காரணமாக எம்மால் வீதியில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. 30 வருட யுத்தம் இருந்தபோது கூட பாதுகாப்பு துறையினர் ஒருபோதும் முஸ்லிம் மக்களின் ஒரு பொதியையேனும் பரிசோதனை செய்யவில்லை. ஆனால் இன்று முஸ்லிம் என்று தெரிந்ததும் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். இதனால் இப்போது எனது பிள்ளையை பாடசாலைக்கு கூட அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றதெனக்” கூறி அழுதார்.

ஆகையால் நாம் மிக தெளிவாக இந்த நாட்டின். அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்வது முஸ்லிம் பொதுமக்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களை வைராக்கியத்துடன் பார்க்கக்கூடாது. நாட்டின் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டியதன் அவசியம் பற்றி எமக்கு ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றன. எனவே மிகவும் சிறிய ஒரு பிரிவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மோசமான துன்பியல் சம்பவத்தை நாம் மிகத் தெளிவாக கண்டிக்கிறோம். இதனை நிராகரிக்கின்றோம். அதேபோன்று இதனை ஒரு அருவருப்பான செயலாகவே பார்க்கின்றோம்.

செப்டெம்பர் 11 அமெரிக்காவில் வர்த்தக நிலைய கட்டிடத்தின் மீது அல்கைதா இயக்கம் இரண்டு விமானங்களைக் கொண்டு தகர்த்தது. மற்றுமொரு விமானத்தை அனுப்பி அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு மத்திய நிலையமாகிய பென்டகன் மீது குண்டு வீசியது. உலகில் யுத்த ரீதியாக அதி நவீன தொழிநுட்பத்தையும் பாதுகாப்பையும் நவீன உபகரணங்களையும் கொண்டுள்ள  பலமான தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட நாட்டின் மீதே அத்தகைய தாக்குதல் இடம்பெற்றது. அந்த இரண்டு வர்த்தக கோபுரங்களிலும் இருந்த சுமார் 1600 பேர் பலியாகினர். அமரிக்கா மட்டுமல்லாது முழு உலகும் அமெரிக்க பாதுகாப்பு மத்திய நிலையத்தின் மீது குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து ஆச்சரியத்திற்குள்ளானது. குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் கடுமையான செயற்பாடுகள் 2016 – 2017களில் தீவிரமாக இருந்து வந்தபோது ஐரோப்பாவின் பிரதான நாடுகளுக்கு அதுவே முக்கிய பிரச்சினையாக இருந்து வந்தது. ஐரோப்பாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தாக்குதலுக்குள்ளாகாத நாடுகளே இல்லை எனலாம். இங்கிலாந்திலும் பிரான்சிலும் ஜெர்மனியிலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி என்னை விட நீங்கள் அறிவீர்கள். அந்தளவு தாக்கத்தை இந்த சர்வதேச பயங்கரவாத இயக்கம் உலகில் ஏற்படுத்தியிருக்கிறது. எம்மைப்போன்ற யுத்த ரீதியில் அதி நவீன தொழிநுட்ப வசதிகள் இல்லாத நாடுகள் அல்ல இந்த நாடுகள். அனைத்து வகையான நவீன தொழிநுட்ப வசதிகளையும் கொண்ட நாடுகளின் மீதே அந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று தான் நான் இதை கூறுவதன் மூலம் சுயலாபம் பெற்றுக்கொள்வதற்காக கூறவில்லை. உலகில் மத தீவிரவாதத்திற்கும் போதைப்பொருள் வியாபாரத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. மத தீவிரவாதமும் போதைப்பொருள் கடத்தலும் சர்வதேச ஆயுத கடத்தலும் ஒரே வலையமைப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த தகவல்களை பெற்றுக்கொள்ள நான் பல புத்தகங்களை வாசித்தேன். அதேபோன்று போதைப்பொருள் கடத்தலுக்கும் பயங்கரவாதத்திற்குமிடையிலும் பலமானதொரு பினைப்பு காணப்படுகின்றது. எல்ரீரீஈ. இயக்கத்தின் முக்கிய வருமான வழியாக இருந்ததும் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரமுமேயாகும்.

சிலவேளை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அவர்களது கொள்கை அடிப்படையில் உலகின் ஏனைய நாடுகளின் மீது மேற்கொண்ட தாக்குதலைப்போன்று நமது நாட்டின் மீதும் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்க கூடும். ஆயினும் அந்த தாக்குதல் எனது போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் காரணமாக விரைவுபடுத்தப்பட்டிருக்கக்கூடும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் நாம் அன்று பாராளுமன்றத்தில் பேசியதைப்போன்று வாய்க்கு வந்த எல்லாவற்றையும் பேசாது பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் செயற்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் என்பது என்னவென்பதைப் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் கட்டாய தேவையாகும். அத்தோடு இனவாதம் என்பதும் பயங்கரவாதம் என்பதும் இரு வேறுபட்ட விடயங்களாகும் என்பதையும், பயங்கரவாதம் என்றால் என்பதை பற்றியும் எமக்கு தெளிவாகத் தெரியும். இருப்பினும் சர்வதேச பயங்கரவாதம் பற்றி நாம் இதுவரையில் ஊடகங்களின் வாயிலாக மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று அதனை அனுபவிக்க நேர்ந்திருக்கிறது.

குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் அரசியல் நோக்கம் பற்றி பார்க்கின்றபோது, அவ்வியக்கம் நாடுகளின் மீது தாக்குதல்களை மேற்கொண்டு அரசியல் ஸ்திரமற்ற சூழலை உருவாக்கி, மக்களின் அமைதியை சீர்குழைத்து அவர்களது நோக்கங்களை அடைந்துகொள்ள முன்னெடுத்துவரும் செயற்பாடுகளாகவே இத்தாக்குதல்கள் அமைகின்றன. முக்கியமாக அவர்கள் இந்த தாக்குதல்களை மேற்கொள்வது மேற்குலக அரசியல் சிந்தனைக்கும் மேற்குலக சமய தத்துவத்திற்கும் எதிராகவேயாகும்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர்கள் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் வத்திக்கானிலும் தமது இயக்கத்தின் கொடியை ஏற்றுகின்ற நாளே அவ்வியக்கத்திற்கு உண்மையான வெற்றி கிட்டிய நாளாகுமென குறிப்பிட்டிருந்தனர். அந்த அடிப்படையிலேயே இந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகின்றதென நான் நினைக்கின்றேன்.

போதைப்பொருள்கள் பற்றி பேசுகின்றபோது நான் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கின்ற  செயற்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் போதைப்பொருளுக்கு எதிரான ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒருவர்தான் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள். சுமார் 3 வாரங்களுக்கு முன்னர் அவரின் தலைமையில் ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்து சுமார் நான்காயிரம் பேர் மோதரை பிரதேசத்தில் ஒன்று சேர்ந்து எனக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். கார்டினல் அவர்களின் இந்த போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை போதைப்பொருள் ஒழிப்பிற்கு பெரும் பலமாக இருந்தது. இதனால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் நோக்கம் அதன் பின்னணி சர்வதேச தொடர்புகள் ஆகியவற்றைப் பற்றி நாம் அறிவுபூர்வமாக விளங்கிக்கொள்ள வேண்டும். சந்தர்ப்பவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எமது நாட்டில் 30 வருட காலமாக இருந்து வந்த எல்ரீரீஈ. இயக்கத்திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. எல்ரீரீஈ. பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்த பெறுமை எமது இராணுவத்தினருக்கு இருக்கின்றது. அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உரைகளில் அநேகமானவர்கள் வீரர்கள் போன்று பேசினார்கள். இந்த தாக்குதலை அரசாங்கத்தினால் தவிர்க்க முடியாமல் போனதாக குறிப்பிட்டார்கள். நாங்கள் என்றால் எல்ரீரீஈ. இயக்கத்தை தோல்வியுறச் செய்தோம் என்றும் கூறினார்கள்.

நான் ஏற்கனவே கூறியதுபோன்று அமெரிக்காவின் பென்டகனினாலேயே அதனை தவிர்க்க முடியவில்லை. 1600 பேர் ஒரே இடத்தில் பலியானார்கள். அமெரிக்காவைப் போன்ற பாரிய நாட்டுக்கே பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்க முடியாமல் போனது. குறிப்பாக அதி நவீன தொழிநுட்பமுள்ள ஒரு நாட்டினாலேயே அது முடியாமல் போனது. எல்ரீரீஈ. இயக்கத்திற்கு எதிரான யுத்தத்தில் சர்வதேச ரீதியாக எமக்கு சிறியளவிலான உதவியே கிடைத்தது. சர்வதேசத்தில் பெரும்பாலானவர்கள் எல்ரீரீஈ. இயக்கத்திற்கு உதவினர். அது இலங்கையில் இடம்பெற்ற விடுதலை போராட்டம் என்றே மேற்குலக நாடுகள் எல்ரீரீஈ. இயக்கத்திற்கு உதவினர்.

மனித உரிமைப் பற்றி பேசி கடந்த நான்கு ஆண்டுகளாக இராணுவத்தினரையும் புலனாய்வு துறையையும் பலவீனப்படுத்தியவர்களை இன்று இந்த தாக்குதலின் பின்னர் கண்டுகொள்ள முடியாதுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக எனக்கும் அரசாங்கத்திற்குமிடையில் இருந்துவரும் முரண்பாட்டை நீங்கள் அறிவீர்கள். அதற்கு அடிப்படையான காரணம் நாட்டின் இராணுவ புலனாய்பு பிரிவை பலவீனப்படுத்தி இராணுவ அதிகாரிகளை தேவையற்ற விதத்தில் சிறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நான் அரசாங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பை வெளியிட்டமையாகும். அச்சந்தர்ப்பங்களில் இந்த நாட்டின் மனித உரிமை அமைப்புகளின் உறுப்பினர்கள் சகலருக்கும்  சட்டம் சமமானதாக இருக்க வேண்டுமென வாதிட்டார்கள். ஆயினும் சட்டம் அனைவருக்கும் சம்மானதுதான் அதற்காக பாதுகாப்பு படையினரை பலவீனப்படுத்த முடியாது என்று கூறினேன். அதேபோன்று புலனாய்வு துறையை பலவீனப்படுத்தவும் இடமளிக்க முடியாதெனக் கூறினேன். முன்னாள் இராணுவ தளபதிகள் மூவரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற போது நான் மேற்கொண்ட ஒரு உரையின் காரணமாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகியது உங்களுக்கு நினைவு இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

அவ்வாறு நான் இராணுவத்தையும் புலனாய்வு பிரிவையும் பாதுகாக்கவே போராடினேன். எமது சில புலனாய்வு துறை நிபுணர்கள் கடந்த காலங்களில் நாட்டைவிட்டுச் சென்றனர். சிலர் இலங்கையில் இருக்க முடியாது என என்னிடம் கூறி வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றனர். நான் சில நாடுகளின் தூதுவராலயங்களுக்கு அவர்களை அனுப்பினேன். ஏனென்றால் அரசாங்கத்தின் பங்காளி தரப்பினர் இவர்களை இருந்த பதவிகளில் தொடர முடியாதென உறுதியாகக் கூறினர். 

ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது எத்தகைய இயக்கம் என்பதைப் பற்றி நாம் எமது கவனத்தை செலுத்த வேண்டும். இங்கு வருகை தந்திருக்கின்ற ஊடகவியலாளர்களிடமும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களிடமும் நான் மிகவும் கௌரவமாக கேட்டுக்கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களின் வாயிலாக மக்களை அமைதிப்படுத்துகின்ற பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தை மாற்றுவதற்கு, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு, மக்களை அமைதியாக வைத்திருப்பதற்கு, மக்களை மகிழ்ச்சியாகவோ அச்சத்துடனோ வைத்திருப்பதற்கு அரசியல்வாதிகளை பார்க்கிலும் ஊடகங்களினாலேயே முடியும். உலகில் எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சுதந்திர ஊடகங்களின் நடவடிக்கைகளின் மூலம் அந்த பயங்கரவாத தாக்குதலின் நோக்கம் சிலவேளை நிறைவேறி இருக்கின்றது. அரசாங்கங்களும் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கின்றன.

நான் இப்படி கூறுவதையிட்டு கோபம் கொள்ள வேண்டாம். எமது சில இலத்திரனியல் ஊடகங்களில் அடிக்கடி “பிரேக்கிங் நியுஸ்” வெளியிடப்படுகின்றது. கடந்த நான்கு நாட்களாக நான் அதனை அவதானித்தேன் பிரேக்கிங் நியுஸ் ஒன்று வருகின்றபோது அனைவரும் அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு அதனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவை பிரேக்கிங் நியுசாக வருகின்ற அளவிற்கு பொருத்தமான விடயங்கள் அல்ல. பிரேக்கிங் நியுஸ் வரவேண்டும் தான். ஆனால் அதன் மூலம் மிக மிக முக்கியமான ஒரு செய்தியே மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அண்மையில் வந்த அத்தகைய பிரேக்கிங் நியுஸ்களை பார்க்கின்றபோது ஏன் இதனை இவ்வளவு கலவரப்பட்டு வெளியிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த பிரேக்கிங் நியுஸ்களை இன்னும் 12 மணி நேரத்திற்கு பின்னர் கூறினாலும் பரவாயில்லை எனத் தோன்றியது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாக நாட்டை அமைதிப்படுத்துவதற்கும் நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த பயங்கரவாதத்தை விரைவில் ஒழித்துக்கட்டுவதற்கும் உங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு மிகவும் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அரச புலனாய்வு பணிப்பாளருக்கு இந்த தாக்குதல் சம்பவம் பற்றி முதலில் முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. வெளிநாடு ஒன்றினால் புலனாய்வு பணிப்பாளருக்கு வழங்கப்பட்ட கடிதம் நீண்டதொரு கடிதமாகும். அதை நீங்களும் பார்த்திருக்கக்கூடும். அந்த கடிதத்தில் இவ்வாறானதொரு தாக்குதல் விரைவில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தாக்குதல்கள் நடத்தப்படும். எனினும் அதேபோன்று முக்கியமாக மக்கள் ஒன்றுசேரும் இடங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து கடிதத்தில் உள்ள விடயம் தாக்குதல் இடம்பெறும் விதம், குண்டுவெடிப்புகள், ஸ்னைப்பர் தாக்குதல்கள், வேறு வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்று 5 அல்லது 6 விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அத்தோடு அத்தாக்குதலுடன் தொடர்புபடுகின்றவர்களின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த விடயங்கள் எமது வெளிநாட்டு நட்பு புலனாய்வு துறையினால் எமது புலனாய்வு துறை பணிப்பாளருக்கு ஏப்ரல் 04ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை இந்த கடிதம் அங்குமிங்கும் சென்றுள்ளது. புலனாய்வு துறை பணிப்பாளர் தனது பணியை செய்திருக்கின்றார். பாதுகாப்பு செயலாளருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் இதனை பெரிதாக கொள்ளாது, இதன் பாரதூரத்தை கருத்திற்கொள்ளாது தேசிய பாதுகாப்பு பிரதானிக்கு இந்த கடிதத்தில் குறிப்பொன்றை எழுதி அனுப்பியுள்ளார். அந்த தேசிய பாதுகாப்பு பிரதானி அந்த கடிதத்தை அவரது கடமை நிமித்தம் சாதாரண முறையிலேயே அனுப்பி இருக்கிறார். அவர் அந்த கடிதத்தை பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பியிருக்கிறார். பொலிஸ்மா அதிபரின் கைக்கும் பாதுகாப்பு செயலாளரின் கைக்கும் சென்ற அதுவே ஊடக நண்பர்களுக்கு கிடைத்த முழுமையான விபரங்கள் அடங்கிய கடிதமாகும். அதுவே இவ்வாறு குறிப்புகளுடன் சென்றிருக்கிறது. அதன் பின்னர் பொலிஸ்மா அதிபர் அதில் குறிப்பொன்றை எழுதி இன்னும் 05 பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு அனுப்பியிருக்கின்றார். அந்த பிரதி பொலிஸ்மா அதிபர்களில் ஒருவர் பிரதி பொலிஸ்மா அதிபரான பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தசநாயக்கவாகும். அவர் பிரபுக்கள் பாதுகாப்புகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு இந்த கடிதத்தின் விபரங்களை அனுப்பி இப்படியான தாக்குதல் ஒன்று இடம்பெறவிருப்பதால் பிரபுக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆயினும் பாதுகாப்பு செயலாளர் அல்லது பொலிஸ்மா அதிபர் அல்லது கடிதத்தை அனுப்பி வைத்த 5 பிரதி பொலிஸ்மா அதிபர்களில் 4 பேரும் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வில்லை. இந்த வகையில் ஏப்ரல் 04ஆம் திகதி முதல் ஏப்ரல் 12ஆம் திகதி வரை ஒருவர் மாறி ஒருவருக்கு இக்கடிதம் கைமாறியுள்ளது. நான் வெளிநாடு சென்றதாகவும் எவருக்கும் நாட்டின் பாதுகாப்பை பொறுப்பளிக்கவில்லை என்றும் என்மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் வெளிநாடு செல்கின்றபோது பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளிநாடு செல்லும்போதும் பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்கவில்லை. பதில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை 2007 - 2010 காலப் பகுதியில் யுத்தம் கடுமையாக இருந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ 5 சந்தர்ப்பங்களில் என்னிடம் பொறுப்பளித்திருக்கிறார். ஆனால் 2010க்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவும் எவருக்கும் பதில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கவில்லை.

எனவே இந்த கடிதம் ஏப்ரல் 04ஆம் திகதி இலங்கையில் முக்கியஸ்தர்களிடம் கிடைக்கப்பெற்று ஏப்ரல் 12ஆம் திகதி வரை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு மத்தியில் பரிமாற்றப்பட்டிருக்கிறது. நான் ஏப்ரல் 16ஆம் திகதி வெளிநாடு சென்றேன். அதாவது அந்த கடிதம் கிடைக்கப்பெற்று 12 நாட்களின் பின்னரே நான் வெளிநாடு சென்றிருக்கின்றேன். அதுவரையில் அந்த கடிதம் கிடைக்கப்பெற்றது பற்றி பாதுகாப்பு செயலாளரோ பொலிஸ்மா அதிபரோ எனக்கு அறிவிக்கவில்லை. இந்த கடிதத்தை என்னிடம் காட்டவும் இல்லை. இது நான் தப்பித்துக்கொள்வதற்காக கூறுகின்ற விடயங்கள் அல்ல. என்றாலும் உண்மையான நிலைமை பற்றியே இங்கு குறிப்பிடுகின்றேன். 16ஆம் திகதி நான் இந்தியாவுக்கு யாத்திரை பயணம் ஒன்றை மேற்கொண்டேன். 3 நாட்கள் இந்தியாவில் இருந்தேன். இந்தியாவில் இருந்து இங்கு வருவதற்கு ஒரு மணித்தியாலமே தேவைப்படும். ஆயினும் அப்போது நாட்டில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆகையால் நான் ஓய்வுக்காகவே சிங்கப்பூருக்கு சென்றேன். அங்கு நான் 3 நாட்கள் தங்கியிருந்தேன். 21ஆம் திகதி மாலையிலேயே நான் இலங்கை வர இருந்தேன். 21ஆம் திகதி காலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் சிங்கப்பூரிலுள்ள எனது நண்பர் ஒருவர் அவரது கைத்தொலைபேசியில் இதோ ஜனாதிபதி அவர்களே, சமூக ஊடகங்களில் இப்படியொரு கடிதம் சுற்றிக்கொண்டிருக்கிறது என என்னிடம் காட்டினார். அது பிரதி பொலிஸ்மா அதிபர் தசநாயக்க பிரபுக்கள் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இத்தகைய சம்பவமொன்று இடம்பெறக்கூடும். ஆகையால் அவர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறி அனுப்பிய கடிதமாகும். நான் தசநாயக்கவின் அந்த கடிதத்தை சிங்கப்பூரில் உள்ள சமூக ஊடகத்திலேயே பார்த்தேன். அந்த கடிதம் பொலிஸ்மா அதிபரின் பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சென்றிருக்கின்றது. அவர் தான் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளர். பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைகளை, ஆவணங்களை அனுப்புகின்றவர். அதாவது பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபர்தான் இந்த கடிதத்தை தசநாயக்கவுக்கும் ஏனைய பொலிஸ்மா அதிபர்களுக்கும் அனுப்பியிருக்கிறார். பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபர் பிரபுக்கள் பாதுகாப்பு பற்றி தசநாயக்கவிடம் தெரிவித்திருக்கிறார்.  என்றாலும், தசாநாயக்க என்பவர் ஜனாதிபதியினதோ பிரதமரினதோ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரி அல்ல, ஆயினும் அந்த பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபர் தனது அந்த கடிதத்தை ஏனையவர்களுக்கு அனுப்பியதை போன்று ஜனாதிபதியினதும் பிரதமரினதும் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் அனுப்பியிருக்க வேண்டும். என்றாலும் இந்த இருவரில் ஒருவருக்கேனும் அந்த கடிதம் அனுப்பப்படவில்லை. பிரதமருக்கு அறிவிக்கப்படவும் இல்லை. அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவும் இல்லை. இதனாலேயே எமக்கு தெரியாது என அண்மையில் கூறப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டம் கடைசியாக ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி இடம்பெற்றது. அதற்கடுத்த அமைச்சரவைக் கூட்டம் ஏப்ரல் 16ஆம் திகதி நடைபெற இருந்தது. ஏப்ரல் 09ஆம் திகதி கூட்டத்தின்போது அனைத்து அமைச்சர்களும் அதற்கடுத்த அமைச்சரவை கூட்டத்தை நடத்த வேண்டாம். நாம் விடுமுறைப் பெற வேண்டியுள்ளதெனக் கூறினர். ஆகையால் தான் அடுத்த அமைச்சரவைக்கூட்டம் தாமதப்பட்டது என்பதை தெளிவாகக் கூற வேண்டும். ஆயினும் இந்த பொறுப்பிலிருந்து கைநழுவுவதற்காக நான் இதை கூறவும் இல்லை. அதற்கு நான் தயாராகவும் இல்லை. ஆயினும் இதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப் பொறுப்பினை அரசு பொறுப்பேற்கின்றபோது புலனாய்வு பிரிவினை முடக்கி புலனாய்வு அதிகாரிகளை கூண்டில் அடைத்த முப்படைகளை பலம் இழக்கச் செய்தலாகிய அனைத்து பொறுப்புக்களையும் அரசாங்கமும் அரசாங்கத்தின் பங்காளிகளாகிய அனைவரும் இதை ஏற்க வேண்டும். அதேபோன்று இச்சம்பவத்தின் போது பாதுகாப்பு செயலாளரும் பொலிஸ்மா அதிபரும் தமது பொறுப்புக்களை எவ்விதத்திலும் நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாவது எனக்கு இவ்விடயத்தை அறியத் தந்திருக்கலாம். இவ்விருவரும் 17ஆம் திகதி புத்தாண்டுக்காக வெற்றிலை கொடுக்கவும் என்னிடம் வந்தார்கள். பால் பொங்கியதன் பின்னர் இவ்விருவரும் வந்து எனக்கு வெற்றிலை கொடுத்தார்கள். அப்போதாவது அப்படியானதொரு கடிதம் வந்திருப்பாக என்னிடம் கூறாது சென்று விட்டார்கள்.

எமது நாட்டில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றவர்களைப்போன்றே இவ்வாறு எவ்வித பொறுப்புமின்றி செயற்படுகின்றவர்களும் இருக்கின்றார்கள். இவ்வாறு தமது பொறுப்பை நிறைவேற்றாததினால் ஏற்பட்ட உயிர் சேதத்திற்கும் பொருட் சேதத்திற்கும் சர்வதேச ரீதியில் சுற்றுலா துறைக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட சகல வித பாதகமான தாக்கங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபருமே பொறுப்புக்கூற வேண்டும். ஆகையால் தான் அவ்விருவரையும் பதவி விலகுமாறு நான் கோரினேன். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பாக அவர்களை பதவி விலகுமாறு கோரினேன். அதற்கமைய பாதுகாப்பு செயலாளர் நேற்று பதவி விலகினார். பொலிஸ்மா அதிபர் தாம் பதவி விலகுவதாக என்னிடம் கூறினார்.

இங்கே இன்னுமொரு விடயத்தையும் மிகத் தெளிவாக குறிப்பிட வேண்டும். பொலிஸ் திணைக்களத்தை நான் பொறுப்பேற்று நான்கு மாதங்களே ஆகின்றன. இந்த குறுகிய காலத்திற்குள் பொலிஸ் துறையில் நான் பாரிய மாற்றங்களை மேற்கொண்டிருக்கின்றேன். அதனை செயற்திறன்மிக்கதொரு அமைப்பாக மாற்றியிருக்கின்றேன். நான்கு வருடங்களுக்கு முன் பொலிசுக்கு கள்ளச் சாராயத்தை கைப்பற்றும் அதிகாரம்கூட இருக்கவில்லை. அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை நானே ஏற்படுத்தினேன். பொலிஸ் துறையை நான் பொறுப்பேற்றபோது 30 பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு வாகனம் கூட இல்லையென தெரிய வந்தது. உடனடியாக குத்தகை ரீதியில் 30 டபள்கெப் வண்டிகளை பெற்றுக்கொடுக்க பணித்தேன். என்மீது பலி சுமத்தியபோதும் கடந்த நான்கு வருடங்களாக பொலிசுக்கு பொறுப்பான அமைச்சர்கள் செயற்பட்ட விதம் இதுவே.

நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் எவ்வித தவறும் இல்லை. நான் அவற்றை நிதானமாக செவிமடுத்தேன். பொலிஸ் திணைக்களத்தில் நான் ஏற்படுத்திய புத்துணர்ச்சி காரணமாகவே போதைப்பொருள் ஒழிப்புக்கெதிரான பலமிக்கதொரு செயற்திட்டத்தை செயற்படுத்த என்னால் முடிந்தது. இதுவரை என்னைத் தவிர எந்தவொரு அரசியல்வாதியும் போதைப்பொருளுக்கெதிரான வேலைத்திட்டத்தைப் பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆயினும் நான் அதை ஆரம்பித்திருக்கின்றேன். அதன்மூலம் இந்த நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றேன். அதற்கு மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்திருக்கின்றது. இத்தாக்குதலினால் அந்த செயற்பாட்டிற்கும் பாதகம் ஏற்பட்டிருக்கின்றது.

பொலிசார் அதிரடிப்படையினர், குற்றப் புலானாய்வு திணைக்களம், முப்படையினர் இந்த சம்பவத்தின் பின்னர் தமது பணிகளை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர். இதுவரையில் 70க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாம் எமக்கு கிடைத்த தகவல்களின்படி இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புபட்ட சுமார் 140 பேர் இலங்கையில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுற்றி வளைப்புக்கள், வெடிப் பொருட்களை கண்டறிதல் போன்ற விடயங்கள் குறித்து எமது பாதுகாப்பு படையினரின் வினைத்திறனான செயற்பாடுகள் எந்தளவு தீவிரப்படுத்தப்பட்டிருக்ன்றது என்பதை இப்போது உங்களால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஆகையால் அடுத்து வரும் சில நாட்களில் இந்த பிரச்சினையை முற்றாக கட்டுப்படுத்த முடியுமென்று நான் நம்புகின்றேன். உலகின் ஏனைய நாடுகள் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதைப் போன்று எமக்கும் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியும். இந்த பிரச்சினையை நாம் முற்றாக கட்டுப்படுத்துவோம். அதற்கான சக்தி பொலிசாருக்கும் முப்படையினருக்கும் உள்ளது. புலனாய்வு மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கான திறமைகள் இவை அனைத்தும் அவர்களுக்கு இருக்கின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சில முக்கிய நாடுகளின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்து எமது பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயற்படுகின்றனர். ஆயினும் எந்தவொரு நாட்டு இராணுவமும் இலங்கைக்குள் கொண்டு வரப்படவில்லை. கொண்டு வரப்போவதுமில்லை. அது குறித்த துறை சார்ந்த அறிவையும் பயிற்சிகளையும் தேவையான நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொள்வதற்கே நாம் வெளிநாட்டு நிபுணர்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். 

ஆகையால் எமக்கு எவ்வாறான பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேர்ந்தபோதிலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கும் முற்றாக ஒழித்துக் கட்டவும் எம்மால் முடியுமென நான் உறுதியாக நம்புகின்றேன். 

(எமது SMS செய்தி சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதால், REG THINAKARAN -> 77000 வழியாக பதிவு செய்துள்ளோர் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்; சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன)

Fri, 04/26/2019 - 18:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை