சர்வதேச விசாரணையை இந்தியாவே தடுத்து வருகிறது

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றதென வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று(04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது,

இலங்கை தொடர்பான விடயம் ஜெனிவாவில் பேசப்படும் போது இந்தியாவின் நிலைப்பாடு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்றே கூறி வருகின்றது.

இதனையே ஆராம்ப காலத்திலிருந்து கூறி வருகின்றது. இதற்கு அப்பால் ஏனைய விடயங்களில் இந்திய அரசு கவனம் செலுத்துவதில்லை.அதற்காக அவர்கள் தயாராகவும் இல்லை.தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் அவ்வாறான ஒரு விசாரணையை இந்தியா விரும்பவில்லை.அதனை தடுக்கும் முயற்சிகளையே அவர்கள் செய்து வருகின்றனர்.

இந்திய அரசு தனது தேசிய பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டே செயற்படுகின்றது.தமிழ் மக்களின் நலனை பார்க்கவில்லை.இதனால் சர்வதேச விசாரணைக்கு இந்தியா எந்த விதத்திலும் உதவாது. மாறாக அதனை தடுப்பதில் மும்மரமாக பணியாற்றும் என்பதே உண்மை என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை