பன்னிப்பிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்து

பன்னிப்பிட்டிய பகுதியில்  அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டிடமொன்றில் இன்று (18) காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக, அக்கட்டிடம் எரிந்து நாசமாகியுள்ளது. 

கடதாசிப் பைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே, இத்தீ விபத்து ஏற்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தெஹிவளை மற்றும் கோட்டை மாநகர சபை தீயணைப்புப் படை வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

Thu, 04/18/2019 - 09:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை