முல்லேரிய துப்பாக்கி சூட்டில் வர்த்தகர் உயிரிழப்பு

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணவீம மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்,  வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (25) 7.40 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், முல்லேரியா ரணவீம மாவத்தையைச்   சேர்ந்த பல்லேவத்த கமகே தன்னில வாசானா சுரங்க (38) எனும் வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் மூவர், குறித்த வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும், இதில் காயமடைந்த வர்த்தகர், முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர். 

Fri, 04/26/2019 - 08:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை