போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை மாத உறுதிமொழி

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை மாத உறுதிமொழி வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (03) காலை நடைபெற்றது.

இதன் பிரதான நிகழ்வு இன்று காலை 8.15மணியளவில் சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அனைத்து மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது.

இதில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Wed, 04/03/2019 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை