புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொச நிறுவனம் அறிவிப்பு  

தமிழ்,- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தாரிக் நேற்று (04) அறிவித்தார் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்கும் ஆலோசனைக்கு அமைய, நடைமுறைக்கு வரும் இந்த விலைக்குறைப்பு நேற்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

1-. உள்ளூர் சம்பா 88 ரூபாவிலிருந்து 84 ரூபாவாகவும்  

2-. சிவப்பு அரிசி 59 ரூபாவிலிருந்து 57 ரூபாவாகவும்  

3. - வெள்ளைப் பச்சை அரிசி 70 ரூபாவிலிருந்து 67 ரூபாவாகவும்  

4. - வெள்ளைச் சீனி 99 ரூபாவிலிருந்து 97 ரூபாவாகவும்  

5. - நெத்தலி 680 ரூபாவிலிருந்து 669 ரூபாவாகவும்  

6-. டின் மீன் 200 ரூபாவிலிருந்து 195 ரூபாவாகவும்  

7.- பெரிய வெங்காயம் 79 ரூபாவிலிருந்து 74 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் மேலும் 15சதொச கிளைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (04) களுத்துறை, தனமல்விலயில் இரண்டு கிளைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார் .  

அத்துடன் தற்போது 411 ஆக இருக்கும் சதொச கிளைகள் இவ்வருட முடிவுக்குள் 500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Fri, 04/05/2019 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை