பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விடுவிப்பு

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

UL 226 என்ற விமானம் மூலம் நேற்று (23) அதிகாலை 5மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Wed, 04/24/2019 - 08:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை