வாள்வெட்டில் இளைஞன் பலி

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மனையாவெளிப்  பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (16) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மனையாவெளிப் பகுதியைச் சேர்ந்த  தங்கத்துரை டனுஸ்ஸன் (21) என்பவரே உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் தகராறே இச்சம்பவத்துக்கு காரணம் எனவும், இளைஞர்கள் இருவர் பெண் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக  நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(அப்துல் பரீத் -திருமலை மாவட்ட விசேட நிருபர்) 

Tue, 04/16/2019 - 13:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை