தேடப்பட்டுவந்த லொறி கண்டுபிடிப்பு

மூவர் கைது

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த லொறியொன்று பொலன்னறுவை, சுங்காவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, தேடப்பட்டு வந்த லொறியொன்று பொலன்னறுவை, சுங்காவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலன்னறுவை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய E.P.P.X - 2399 எனும் இலக்கமுடைய  லொறி கைப்பற்றப்பட்டுள்ளதோடு,  சந்தேக நபர்கள் மூவரைக் கைதுசெய்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

Tue, 04/30/2019 - 11:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை