அநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த ஆதர்ஷ கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அருகிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலைக்கு அருகில் கைக்குண்டொன்று காணப்படுவதாக பரஸன்கஸ்வெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்திற்கு சென்ற விசேட பொலிஸ் அதிகாரிகள் அக்குண்டை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.
Wed, 04/24/2019 - 13:58
from tkn