சொந்த மைதானத்தில் சென்னை அணி வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 22 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ஐ.பி.எல் தொடரின் 18 ஆவது லீக் ஆட்டமாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப வீரர் பாப் டூ பிளசிஸ் 38 பந்துகளில் 54 ஓட்டங்களை விளாசியதோடு அணித்தலைவர் தோனி 37 ஓட்டங்களை பெற்றார். தொடர்ந்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அகர்வால் (67) மற்றும் கே.எல். ராகுல் (55) அரைச்சதம் பெற்றபோது ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்தையே பெற்றனர்.

இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களையே பெற்றது.

Mon, 04/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை