மான்தாக்கி எஜமான் பலி

அவுஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட மான், எஜமானரை கொம்புகளால் குத்திக் கொன்றுள்ளது.

வடகிழக்கு மெல்போர்ன் வங்கராட்டா பகுதியை சேர்ந்த ஒருவர் வெளியே சென்றுவிட்டு தனது வீட்டுக்குள் நுழைந்தபோது, அவர் வளர்த்து வந்த செல்லப்பிராணியான கலப்பு வகை மான், திடீரென அவர் முன் பாய்ந்து கொம்புகளால் குத்தி கொன்றது.

அவருக்கு உதவ வந்த அவரது மனைவியும் இதில் பலத்த காயமடைந்தார்.

தகவலின் பேரில் அங்கு வந்த பொலிஸார், ஆக்ரோஷத்துடன் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த மானை சுட்டுக்கொன்றனர்.

அமைதியாக உலா வரும் மான்கள், இனப்பெருக்க காலங்களில் இதுபோன்று முரட்டுதனமாக நடந்துகொள்வது வழக்கமான ஒன்றாகும்.

Thu, 04/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை