தம்புள்ளை – ஹபரண பிரதான வீதியில் பஸ் எரிந்து நாசம்

தம்புள்ளை – ஹபரண பிரதான வீதியில் திகம்பதன பிரதேசத்தில் வைத்து இன்று (08) அதிகாலை, சொகுசு பஸ்ஸொன்று முழுவதுமாகத் தீப்பற்றி எரிந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த பஸ், குருநாகலிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணஞ்செய்த வேளையிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக சீகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ்ஸில் ஏற்பட்டிருக்கும் இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாமெனத் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Mon, 04/08/2019 - 14:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை