மாகாண சபை தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் சட்ட விளக்கத்தை பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பின் 33 (1) (d) என்ற சட்டப் பிரிவுக்கமைய தேர்தல் ஆணையாளரின் ஆலோசனையின் பேரில் தேர்தல் நடத்துவதற்கான சூழலை ஜனாதிபதி உருவாக்க வேண்டும்.
எல்லைகளை நிர்ணயிக்கும் அறிக்கை சமர்ப்பிக்கத் தவறியமையே தேர்தல் தாமதற்கு காரணம் என தேர்தல் ஆணையாளர் கூறுகிறார். எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதை ஆராயும் குழுவொன்று கடந்த வருடம் நியமிக்கப்பட்ட போதும் அக்குழு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறத் தவறிவிட்டது.
திருத்தப்பட்ட மாகாண சபை சட்டம் இப்போதும் அமுலில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருதினால் ஜனாதிபதி எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் பிரசுரிக்கலாம். எனினும் அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படாமல் இருப்பதே தற்போதைய சிக்கல் நிலைக்கு காரணமாகும் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறுகிறார்.
from tkn