கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்கு அவுஸ்திரேலியா மீண்டும் உதவி

இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் உதவி வழங்கியுள்ளது. இதற்கென 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (இலங்கை ரூபா 124 மில்லியனுக்கு அதிகம்) ஒதுக்கியுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

சர்வேதேச கண்ணி வெடி அகற்றும் தினமன்று 4 ஏப்ரல், இலங்கைக்கு மீண்டும் உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் அவுஸ்திரேலியா பெருமையடைவதாக அவுஸ்திரேலியாதூதரகம் விடுத்துள்ள செய்தியறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக Mine Action Group(MAG) மற்றும் Lankan Organisation Devlon Assistance for Social Harmony (DASH) ஆகிய இரண்டு நிறுவனங்களும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு இணைந்து செயற்படுவதற்கென நிதியுதவியாக 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (இலங்கை ரூபா 124 மில்லியனுக்கு- (124,287,592.80) - அதிகம்) ஒதுக்கியுள்ளது.

வட மாகாணத்தின் மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு புதிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாரிய உதவி கிடைக்க இருக்கிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மீண்டும் தமது சொந்தக் காணிகளுக்குச் சென்று தமது வாழ்க்கையை ஆரம்பிக்க இதன் மூலம் வாய்ப்புக் கிடைக்கும்.

இலங்கையின் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளில், சென்ற வருடங்களில் மிகப்பெரிய பங்காளியாக அவுஸ்திரேலியா செயற்பட்டு வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல் 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை இதுவரை (இலங்கை ரூபா 2 பில்லியன்) உதவியாக இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

Wed, 04/03/2019 - 16:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை