மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதியின் கட்சி பெரு வெற்றி

மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹின் கட்சி மாபெரும் வெற்றி ஒன்றை நெருங்கி இருப்பது ஆரம்பக்கட்ட தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

87 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் மாலைதீவு ஜனநாயக கட்சி கிட்டத்தட்ட 60 ஆசனங்களை வென்றிருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தேர்தலில் இறுதி முடிவு நேற்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சோலிஹின் கட்சி வெற்றிப் பெற்றால், நாட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதியும் மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மொஹமட் நஷீட் நாடு திரும்ப வழிவகுக்கும்.

அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் கட்சியினர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பது போன்றும் நடனம் ஆடுவது போன்றுமான காட்சிகள் பதிவிடப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 78 வீதத்திற்கு அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

“இந்த முடிவுகள் மாலைதீவில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வழிவகுக்கும்” என நஷீத் தெரிவித்தார்.

Mon, 04/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை