உலகில் எஞ்சிய ‘யங்சே’ ஆமைகளில் ஒன்று இறப்பு

உலகில் மிக அரிதான மிருதுவான மேலோடு கொண்ட யங்சே என்ற ஆமை ஒன்று உயிரிழந்துள்ளது. இதனால் இந்த வகை ஆமை இனத்தில் மூன்று மாத்திரமே உலகில் எஞ்சியுள்ளன.

தென் சீனாவின் சுசூ மிருகக்காட்சி சாலையிலேயே இந்த பெண் ஆமை உயிரிழந்துள்ளது. 90 வயதைத் தாண்டி இருக்கும் இந்த ஆமைக்கு செயற்கை முறையில் கருவுறச் செய்ய விஞ்ஞானிகள் ஐந்தாவது தடவையாக முயற்சி மேற்கொண்ட நிலையிலேயே அது உயிரிழந்துள்ளது.

வேட்டை, மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் வாழ்விடங்கள் அழிவடைவதால் இந்த ஆமை இனம் அழிவின் விளிம்பை அடைந்துள்ளது. 100 வயதுக்கு மேற்பட்டது என கணிக்கப்படும் ஆமை ஒன்று சீன மிருகக்காட்சி சாலையில் எஞ்சியிருப்பதோடு மேலும் இரு ஆமைகள் வியட்நாம் காட்டில் வாழ்கின்றன.

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை